Vinayakar ilaneer

கத்ரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி இன்று கும்பகோணம் மடத்து தெரு பகவத் விநாயகருக்கு 1008 இளநீரால் அபிஷேகம்.

கத்ரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் தொடர்வதால், இக்காலகட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டியும்,கடும் வெயில் நாள் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க வேண்டியும், கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள தொன்மையான பகவத் விநாயகருக்கு  இன்று 1008 இளநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து தயிர் சாதத்தால் பள்ளையயும் சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *