Fourth Thiruparankundram kavasam

திருப்ரங்குன்றுறை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையாபுரியில் மகிழ்ந்துவாழ் பவனே

ஓய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
ப‌ழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடைய முதல்வன் முதலாய் நமோ நமோ

விராலிமலை யுறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத் தோன் மருகா நமோ நமோ
சூரகம் காரா துரையே நமோ நமோ
வீரவேலேந்தும் வேலனே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ

கண்கள் ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடைக்கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சச்ச‍ ச்ச‍ச ஓம்ரீம்
ரரர‍ ரர‍ர ரீம் ரீம்

வவவ‍ வவ‍வ ஆம் ஹோம்
ணணண‍ ணண‍ண வாம் ஹோம்
பபப‍ பப‍ப சாம் சூம்
வவவ‍ வவவ‍ களம் ஓம்
வவ லீலீ லுலு நாட்டிய அட்சரம்

கக கக‍ கக‍ கந்தனே வருக‌
இக இக இக ஈசனே வருக‌

அடுத்து…ஐந்தாவது கவசம்- திருத்தணி(கை) கவசம்

– வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *