Thanjai periyakoil sani maha pradhosham

சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையான திரவியங்களால்  அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு விமர்சையாக கொண்டாடப்படும். ஐப்பசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று சனி பிரதோஷமாக நடைபெற்றது. பெருவுடையாருக்கு  ஏற்ற பெருநந்திக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், அரிசிமா பொடி, கரும்புச்சாறு, சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இந்த மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *