aadi month en ivvalavu sirappugal

ஒரு வருடத்தை உத்தராயண, தட்சிணாயன புண்ணிய காலம் என இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்படுகின்றன. தை மாதம் முதல் ஆனி வரை உத்தராயண காலம், அதாவது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், தட்சிணாயன புண்ணிய காலம், அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகர்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

நம் ஊரில் ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதமாக பார்க்கப்படுகிறது. எல்லா அம்மன் கோவில்களிலும் மிக விசேஷமாக திருவிழாக்கள் கொண்டாடப்படும். அத்தினையொரு கீர்த்தி. இத்தனை ஸ்ரேஷ்டமான மாதமாக இருந்தாலும் இந்த மாதத்தில் திருமணங்கள் செய்யப்படுவதில்லை.

ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்படுகின்றன. தை மாதம் முதல் ஆனி வரை உத்தராயண காலம், அதாவது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதாகவும், தட்சிணாயன புண்ணிய காலம், அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகர்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரன் ஆளும் கடக ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. சிவனை விட சக்தியின் வல்லமை அதிகம் பரிமளிக்கிறது. அதனால் இதனை ஆஷாட மாதமாக சக்தி வழிபாட்டிற்கு உகந்தது, இந்த ஆடி மாதம் சக்தி மயமாக வழிபடும் வகையில் ஈஸ்வரிக்குச் சிவ பெருமான் அனுக்கிரகம் செய்தார்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *