சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பூஜை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அப்பம் மற்றும் அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
‘கட்டண உயர்வு விபரம் வருமாறு:
படி பூஜை – ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000)
சகஸ்ரகலசம் – ரூ. 91,250(80,000)
உதயாஸ்தமன பூஜை – ரூ61,800 (50,000)
உற்சவபலி – ரூ. 37,500(30,000)
களபாபிஷேகம் – ரூ.38,400 (22,500)
தங்க அங்கி சார்த்துதல் – ரூ.15,000(10,000)
புஷ்பாபிஷேகம் – ரூ.12,500 (10,000)
சதகலசம் – ரூ.12,500 (10,000)
அஷ்டாபிஷேகம் – ரூ.6,000(5,000)
உச்ச பூஜை – ரூ.3,000 (2,500)
பகவதி சேவை – ரூ.2,500(2,000)
உஷ பூஜை – ரூ.1,500(1000)
கணபதி ஹோமம் – ரூ.375 (300)
கெட்டு நிறைத்தல் – ரூ.300(250)
அபிஷேக நெய் – (100 மி.லி), ரூ.100(75)
நீராஞ்சனம் – ரூ.125(100)
அரவணை – ரூ.100(80)
அப்பம் 1 பாக்கெட் – ரூ.45(35).
இந்த கட்டண உயர்வு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.
Leave a Reply