Sabarimalai poojai rate hike

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பூஜை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. அப்பம் மற்றும் அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

‘கட்டண உயர்வு விபரம் வருமாறு:

படி பூஜை – ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000)

சகஸ்ரகலசம் – ரூ. 91,250(80,000)

உதயாஸ்தமன பூஜை – ரூ61,800 (50,000)

உற்சவபலி – ரூ. 37,500(30,000)

களபாபிஷேகம் – ரூ.38,400 (22,500)

தங்க அங்கி சார்த்துதல் – ரூ.15,000(10,000)

புஷ்பாபிஷேகம் – ரூ.12,500 (10,000)

சதகலசம் – ரூ.12,500 (10,000)

 அஷ்டாபிஷேகம் – ரூ.6,000(5,000)

உச்ச பூஜை – ரூ.3,000 (2,500)

பகவதி சேவை – ரூ.2,500(2,000)

உ‌ஷ பூஜை – ரூ.1,500(1000)

கணபதி ஹோமம் – ரூ.375 (300)

கெட்டு நிறைத்தல் – ரூ.300(250)

அபிஷேக நெய் – (100 மி.லி), ரூ.100(75)

நீராஞ்சனம் – ரூ.125(100)

அரவணை – ரூ.100(80)

 அப்பம் 1 பாக்கெட் – ரூ.45(35).

இந்த கட்டண உயர்வு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *