kalviselvam allitharum saraswathi kavasam

சரஸ்வதி என் தலையைக் காக்க! வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
விரசு பகவதி கண்ணைக் காக்க! 
நாசி விமலை வாக்வாதினியாள் காக்க!

வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க!
உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க!
மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க!
வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க!

எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க! வித்யா திருஷ்டாத்மா
என் மார்பில் இருந்து காக்க! எழுத்து வித்யா ரூபிணி 
என் நாபி காக்க! வாணி கரம் காக்க! எல்லா எழுத்தின் 
தேவி விழுத்தக என் அடி காக்க!

வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான் 
என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க! காக்க!
முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க!
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க!

மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க! 
காக்க! புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில் 
தங்கியெனைப் புரந்து அருள்க! மேற்குத் திக்கில் 
சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க!

துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில் 
என்னைக் காக்க! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க! நத்து சர்வ 
பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!

அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க!
புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத் திசைகளிலும் இருந்து காக்க! காக்க!
எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க!
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *