Thirupathy Devasthanam announcement

கொரோனா ஊரடங்கு காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள்  அதே டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமென்றாலும் தரிசனம் செய்யலாம் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்கு நேரத்தில் மார்ச் முதல்  ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த கால கட்டத்தில்  ஆன்லைன், அஞ்சலகம், இ தரிசன கவுண்டர்கள் மூலம் 300 ரூபாய் சிறப்பு தரிசனம்  மற்றும் தங்கும் விடுதிகள், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட  ஆர்ஜித சேவைகள் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு  தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 

இந்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்து கொண்டால் முன்பணம் திரும்ப வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதற்கான கால அவகாசம் அக்டோபர் 30 வரை இருந்த நிலையில் தற்போது டிசம்பர் வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே  இணையதளத்தின் மூலமாக டிக்கெட் ரத்து செய்யும் கேட்கும் பக்தர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணத்தை ரிபெண்ட் செய்யப்பட்டு வருகிறது. டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பாத பக்தர்கள் அந்த டிக்கெட் வைத்து எப்போது வேண்டுமென்றாலும் அதனை காண்பித்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் டைரி மற்றும் காலண்டர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தால் தபால் மூலமாக  அவர்களது முகவரி அனுப்பி வைக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *