Thirupathy VIP ticket

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத்து செய்யப்பட்ட உதயஅஸ்மனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு விஐபி  தரிசனம்  தேவஸ்தானம் அறிவிப்பு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 19 ம் தேதி முதல் அனைத்து சேவைகளும்   ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சேவைக்காக டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

அதன்படி, உதய அஸ்தமன சேவை டிக்கெட் பெற்றவர்களுடன் 5 பக்தர்கள்  வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே இந்த பக்தர்கள் நீங்கள் விரும்பும் தேதிக்கு முந்தைய நாள் மாலை 5 மணிக்குள் திருமலையில் உள்ள ஆர்ஜிதம் அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். 

இந்த சேவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் 10 வயதுக்கு உட்பட்டவர்களும் அனுமதி கிடையாது.மேலும் விவரங்களுக்கு ஆர்ஜிதம்  அலுவலக தொலைபேசி எண் – 0877-2263589 அல்லது மின்னஞ்சல் arjithamoffice@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *