Temples dharshan

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தமிழகம் முழுவதும் இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்
 
முதல்கட்டமாக கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களும் இன்று முதல் திறப்பதற்கு வழிகாட்டுதளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து  கோவில்களும் திறக்கப்பட்டன. முக கவசம், தனி மனித இடை வெளி போன்றவை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *