Tag: temples

  • Shiva temples with the presence of the Lord!

    தமிழ்நாட்டில் சிவாலயங்களில் திருமால் சந்நிதி அமைந்திருப்பது சைவ-வைணவ ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகிறது. சிவனும் பெருமாளும் ஒருங்கிணைந்து அருள்பாலிக்கும் இத்தலங்கள் பக்தர்களுக்கு சிறப்பு வாய்ந்தவை. இத்தகைய கோவில்கள் ஆன்மீகத்தில் தனித்துவம் பெற்று, பக்தர்களை ஈர்க்கின்றன.

    இதோ, அத்தகைய முக்கிய சிவாலயங்களின் பட்டியல்:

    1. சிதம்பரம்: கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி இங்கு அமைந்துள்ளது. நடராஜ வடிவத்தில் சிவனுடன் பெருமாள் அருள்பாலிப்பது பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது.

    2. கச்சி ஏகம்பரம்: நிலாத் துண்டப் பெருமாள் சந்நிதி, சிவபெருமானுடன் இணைந்து பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

    3. கொடி இடச் செங்குன்றார்: ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி, இங்கு வரும் பக்தர்களுக்கு அமைதியையும் பலத்தையும் தருகிறது.

    4. சிக்கல்: கோல வாமனப் பெருமாள் சந்நிதி, சிவாலயத்துடன் புனிதத்தை பரப்பி, ஆன்மீக உணர்வை ஏற்படுத்துகிறது.

    5. திருநயா: ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி, பக்தர்களுக்கு மன அமைதியையும் ஆன்மீக உயர்வையும் அளிக்கிறது.

    6. திருச்செந்தூர்: கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி, முருகன் கோவிலுடன் சிவ-வைணவ ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

    7. மதுரை: கரியமாணிக்கப் பெருமாள் சந்நிதி, மீனாட்சி அம்மன் கோவிலுடன் இணைந்து பக்தர்களை கவர்கிறது.

    8. திருநாவலூர்: வரதராஜப் பெருமாள் சந்நிதி, சிவனுடன் இணைந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

    9. திருநெல்வேலி: நெல்லை கோவிந்தர் சந்நிதி, ஆன்மீக பலத்தையும் அமைதியையும் வழங்குகிறது.

    10. திருப்புவனம்: கோவிந்தா சந்நிதி, சிவாலயத்துடன் இணைந்து புனிதத்தை பரப்புகிறது.

    11. பாண்டிக் கொடுமுடி: அரங்க நாதர் சந்நிதி, சிவ-வைணவ பக்தியை ஒருங்கிணைத்து பக்தர்களை ஈர்க்கிறது.

    12. திருவிடைமருதூர்: இங்கு பெருமாள் சந்நிதி, சிவனுடன் இணைந்து ஆன்மீக சிறப்பை வெளிப்படுத்துகிறது.

    13. திருக்கோளூர்: வைத்திய மாணிக்கப் பெருமாள் சந்நிதி, சிவாலயத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

    இத்தலங்கள் சைவ-வைணவ பக்தியின் அழகிய சங்கமத்தை வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில், இக்கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து, ஆன்மீக பயணங்கள் பிரபலமடைந்து வருகின்றன. பக்தர்கள் இங்கு சென்று, சிவனையும் திருமாலையும் ஒரே இடத்தில் வழிபட்டு, ஆன்மீக பலனை பெறுகின்றனர்.

  • The vision of Garuda and its benefits!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • Tamilnadu Iyappan Temples

    திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. இங்கே 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்படுகின்றன.

    * சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.

    * சென்னை  அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.

    * சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

    * திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

    * சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணியை பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.

    * கையில் பூச்செண்டுடனும் இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

    * கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

    * சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும் ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.

    * சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

    * விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.

    * திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன் விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும் விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள்.

    * பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.

    * ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள பிடவூரில் தரிசிக்கலாம்.

    * தென்காசி அருகே குற்றாலத்தில் நான்கு திசைகளிலும் ஐயன் அருள்புரிகிறார். இதில் மேலவாசல் தர்மசாஸ்தா, பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்புரிகிறார். பீட வடிவில் அருவமாக ஐயன் இங்கு அருள்வது சிறப்பு.

    * திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகே, ஏரிக்கரை ஓரத்தில் கர்ப்பிணி ஒருத்திக்கு கையில் விளக்கொளியுடன் சடைமுடியுடன் வந்து பிரசவம் பார்த்த ஐயன், பாலக வடிவில் நின்ற கோலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

    * சேங்காலிபுரம் அருகே எருமைத்தலை கிராமத்தில் மாவிலங்கை மரத்தடியில் யானை மீதமர்ந்த கம்பீரமான சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * நெல்லை, பாளையங்கோட்டை, சாந்தி நகரில் சங்குகர்ணன் எனும் அரக்கனை அழித்த சண்பகாரண்ய சாஸ்தா எனும் மத்யாரண்யேஸ்வர சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * மயிலாடுதுறை, வஸ்த்ரராஜபுரம் எனும் இடத்தில் தேவியரை அணைத்தபடி காட்சி தரும் ஐயனை தரிசிக்கலாம். இங்கு நாகம் ஒன்று ஐயனுக்கு காவலாக உள்ளதால் இவர் நாகசாஸ்தா என்றும் வணங்கப்படுகிறார்.

    * தஞ்சை, மெலட்டூர் அருகே சுரைக்காயூரில் ஐயன் தன் தேவியுடன் அருள்கிறார். வருடா வருடம் மெலட்டூரில் நடக்கும் பாகவதமேளாவில் ஹரிஹரபுத்ர ஜனனம் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.

  • Puratasi month perumal temples

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தளங்களை பார்க்கலாம்.

    அரங்கநாத சுவாமி கோவில்
    ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.

    சாரங்கபாணி திருக்கோவில்
    சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.

    மூலவர் திருக்கோலம்
    இத்தல மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் போற்றப்படுகிறார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் அருளுகிறார்.

    கள்ளழகர் திருக்கோவில்
    108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர்.

  • Top ten richest temples in India

    பத்மநாப சுவாமி கோயில்
    பத்மநாப சுவாமி கோயில் விஷ்ணுவை கடவுளாக கொண்ட கோயில் பத்மநாப சுவாமி கோயில் ( திருவனந்தபுரம் ) , கேரளா . இந்திய கோயில்களில் முதல் செல்வந்த கோயில் பத்மநாப சுவாமி கோயில். இந்த கோயிலில் 6 ரகசிய அரை உள்ளது. ரகசியம் நிறைந்த இந்த அறைகளில் எண்ணிலடங்கா புதையல்கள் கொட்டி கிடகின்றன, இந்த 6 ரகசிய அறைகளில் 4 இல் ஆவணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது , ஆனால் மீதமுள்ள 2 அறைகளில் பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் தங்கம் வைடூரியம் போன்ற எண்ணற்ற செல்வங்கள் உள்ளன.

    திருப்பதி பாலாஜி கோயில்
    திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயம் வெங்கடேஷ்வரரின் பழமையான புனிதமான கோயில் ஆகும். இது இந்து கடவுளான விஷ்ணுவின் ஒரு வடிவமாகும். திருப்பதி மலைகளின் ஏழாவது சிகரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது “ஏழுமலையான் கோயில்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 80,000 உள்ளது. பாலிவுட், விளையாட்டு மற்றும் வணிகத் தொழிற்துறையில் இருந்து பல புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். ஒவ்வொரு தடவையும் அவர்கள் வருகை தரும் போதும் பல கோடிகளை நன்கெடையாக கோவிலுக்கு செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1000 கோடியை நன்கொடையாக வருகிறது.

    சாய் பாபா கோவில்
    சாய் பாபா கோவில் இந்தியாவில் உள்ள மற்றொரு பிரபலமான யாத்ரீக ஸ்தலமாகும். சாய் பாபாவிற்கு தனி மதம் என்று எதுவும் இல்லாத காரணத்தால் அணைத்து மதத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து செல்வதை காணலாம். அவரது வாழ்க்கை முழுவதிலும் போதித்த ஒரே சொல் ‘கடவுள் ஒன்று’ என்று ,அதனை ‘சப்பா மாலிக் ஏக் ஹாய்’.அக்கோவிலில் ரூ. 32 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 6 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 350 கோடி ரூபாய் நன்கொடையாக அங்கு வரும் பக்தர்களால் அளிக்கப்படுகிறது.

    வைஷ்ணவ தேவி கோவில்
    வைஷ்ணவ தேவி கோவில் காத்ரா, ஜம்மு காஷ்மீர் நகருக்கு அருகே உள்ளது. இக்கோவிலுக்கு இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள அம்மனின் ஆசிர்வாதத்தை பெற ஒன்றிணைகின்றனர். வட இந்தியாவில் உள்ள முக்கிய புனித தளங்களில் ஒன்றாக இக்கோவில் திகழ்கிறது. இது இந்தியாவின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த சன்னதிக்கு வருகை தருகின்றனர், பணம் செலுத்துகின்றனர். இக்கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக வருகின்ற வருமானத்தின் மதிப்பு ரூ. 500 கோடி ரூபாயாகும்.

    சித்தி விநாயகர் கோவில்
    சித்தி விநாயகர் கோவில் விநாயக பெருமானுக்கான ஒரு வழிபாட்டு தளமாகும். இக்கோவிலில் விநாயகர் ஒரு சிறு அறையில்தான் காட்சி தருகின்றார். பிரபலமான கோயில்களில் ஒன்றாக மும்பை சித்திவிநாயக் கோயில் ஆகும். கோயிலின் பொதுவான பார்வையாளர்களின் பட்டியலில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களாகும் அடங்குவர்.உள்ளூர் பார்வையாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இந்த கோயிலுக்கு செல்கின்றனர். கணேஷ் மீது அணியப்படும் கிரிடமானது சுமார் 3.7 கிலோ தங்கத்தால் ஆனது இதனை கொல்கத்தாவில் உள்ள வணிக வியாபாரி ஒருவர் நன்கொடை அளித்துள்ளார். கோயிலின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 48 கோடி ரூபாயும் நிலையான வைப்பு நிதி ரூ. 125 கோடியாகும்.

    பொற்கோவில்
    பொற்கோவில் உலகின் மிக முக்கியமான சீக்கிய யாத்ரீக ஸ்தலம் ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப், அம்ரித்சர் நகரில் அமைந்துள்ள பொற் கோவில் குருத்வாரா என அழைக்கப்படுகிறது. இதன் பிரதான கோவில் கட்டிட சுவர்களில் மரத்தாலான பேனல்கள் மற்றும் விரிவான தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.’ஆதி கிரந்த்’ (குரு கிரந்த் சாஹிப்) தாங்கி நிற்கும் அடித்தளம் விலையுயர்ந்த கற்கள் மற்றும் வைரங்களால் நிரம்பியுள்ளது. குரு கிரந்த் சாஹிப்பின் சுற்றளவானது தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் இங்கு சுமார் 35,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகைபுரிகின்றனர். இக்கோவிலானது வடகிழக்கு திசையிலமைந்த மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கோயில்களுல் ஒன்று.

    சோம்நாத் கோவில்
    சோம்நாத் கோயிலின் சொத்துக்கள் ஒரு புதிராகவே இருந்தாலும், மிகவும் புகழ் பெட்ர பணக்கார கோவிலில் ஒன்றாகவே திகழ்கின்றது, நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. ‘சோம்நாத்’ என்ற பெயர், ‘சந்திர கடவுளின் காப்பாளர்’ என்று பொருள்படும், சிவபெருமானைக் குறிக்கும் இதன் கற்ப கிரகமானது முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது.1,00,000 முதல் 5,00,000 பக்தர்கள் ஒவ்வொரு நாளும் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். சோம்நாத் அறக்கட்டளையின் நிலசொத்துக்கள் ரூ .1,639.14 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இதுவும் இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது.2012 ஆம் ஆண்டில், சூரத் மற்றும் மும்பையிலிருந்து வந்த இரண்டு வணிகர்கள், கோயிலுக்கு சுமார் 36 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

    மீனாட்சி அம்மன் கோவில்
    மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பழமையான கோயிலாகும்,இக்கோவில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.இதில் பார்வதி தேவி காட்சி புரிந்து மக்களுக்கு அருள் புரிகிறார்.இந்த கோவில் ஒரு நாளைக்கு 15,000 பக்தர்கள் வருகை புரிகின்றனர். வெள்ளிக்கிழமை 25,000 பேர் இங்கு கூடுகின்றனர். கோயிலில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. கோயிலுடன் தொடர்புடைய மிக முக்கியமான திருவிழா “மீனாட்சி திருக்கல்யாணம் “(மீனாட்சி தெய்வீக திருமணம்) ஆகும்.இது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மூன்றாவது பணக்கார கோவில்களில் ஒன்றாகும். வருடந்த மற்றும் மே மாதத்தில் 10 ஆவது நாள் மீனாட்சி திருக்கல்யாணம் திருவிழா கொண்டாடபடுகிறது. இத்திருவிழாவிற்கு சுமார் 1மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆறு கோடி 60 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வருகின்றது.இந்த கோவில் இரு தங்க விமனங்களும், 33,000 சிலைகளும் இருப்பது இக்கோவிலுக்கு சிறப்பை அளிக்கிறது.

    காசி விஸ்வநாத கோவில்
    காசி விஸ்வநாத கோவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது இது வாரனாசியில் அமைந்துள்ளது.இக்கோவிலின் மேற்கு கரையோரம் புனித நதியான கங்கை பாய்கிறது, இங்கமைந்துள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் விஸ்வநாதர் மிகவும் சத்தி வாய்ந்த கடவுளாக காட்சி தருகின்றார். கோயிலின் குறிப்பிடத்தக்க தூண்கள் மற்றும் கோபுரங்கள் தூய தங்கத்தால் செய்யப்பட்டவை.

    அமர்நாத் கோயில்
    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தென் காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சிவனின் புனித பனி லிங்கத்தை வழிபட மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர். எந்த ஆடம்பரமான தூண்கள் மற்றும் கோபுரங்களும் இல்லாமலே மக்களின் மனதை தன்வசப்படுத்திய ஒரு தனிசிறப்பு வாய்ந்த யாத்ரீக தளமாகும் .ஒவ்வொரு வருடமும் ஐீலை மற்றும் ஆகஷ்ட் மாதங்களில் மக்கள் இந்த புனித பயணத்தை தொடங்குகின்றனர்.
     

  • Guru Bagavan Temples

    பட்டமங்கலம் :
    ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்ட மங்கலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    தேவூர்:
    கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

    தக்கோலம்:
    அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலைநயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி.

    குருவித்துறை:
    மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருவில் இருக்கும் ஊர் குருவித்துறை. இங்கு சித்திரரத வல்லபப்பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக்கோயில் உள்ளது. வைஷ் ணவக் கோயிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    திரிசூலம்:
    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்ப் பொருளாகச் சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று. அம்மனின் உள்ளகை தங்கத்தாலானது. இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள்.

    இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம்பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது.

    மேதா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்தோடு சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம்,திருவாய்மூர், திருக்கைக் சின்னம் போன்ற ஊர்களில் அழகிய கோலத்தில் தட்சிணா மூர்த்தியைக்காணலாம். சிவபெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அந்தக் கோலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியைக்காண லால்குடி, திருநெய்தானம், திருச்சக் கரப்பள்ளி, சூரியனார் கோயில், திருவாங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

    திங்களூர்:
    திங்களூரில் கருவறையை சுற்றிய பிரகாரலத்தின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது அபூர்வமான காட்சியாகும். சிதம்பரத்தில் தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.

    பூந்தோட்டம்:
    பொதுவாக தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர்ந்துதான் அருள்பாலிப்பார். ஆனால் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரஸ்வாமி ஆலயத்தில் குருபகவான் பன்னிரண்டு ராசி மண்டலங்களின் மேல் வீற்றிருக்கிறார். இந்த ராசி மண்டல குருபகவான் ‘பரமகுரு‘ என சிறப்பு பெற்றவர். இவரை வணங்கினால் திருமணத்தை தடை நீங்கி, நல்ல மனைவி, புத்திர பாக்கியம், பெரும்புகழ், பெருஞ்செல்வம் ஆகியவை கிட்டும். இவருக்கு புத்திரகாரன் என்ற பெயரும் உண்டு. இந்த குருபகவானுக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேக அர்ச்சனை செய்தால் எல்லாவிதமான நன்மைகளும் கிட்டும் என்று ஸ்ரீஅகஸ்திய நாடி வாக்யம் கூறுகிறது.

    ஓமாம்புலியூர்:
    சிதம்பரத்திற்கு தென்மேற்கில் 30 கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் உள்ளது. இறைவன்: ஸ்ரீதுயர்தீர்த்தநாதர், இறைவி: பூங்கொடி நாயகி, இது இறைவன் தட்சிணா மூர்த்தி கோலத்தில் உமையம்பிகைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த திருத்தலம்.

    திருலோக்கி:
    கும்பகோணம் – திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி காளை மீது அமர்ந்திருக்கும் காட்சி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. குரு பரிகாரத்திற்கு ஏற்றது.

    மயிலாடுதுறை:
    மயூர நாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி – குரு வழிபாட்டுக்கு ஏற்ற தலம் ஆகும்.

    கும்பகோணம் :
    மகாமக பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம். குரு பரிகாரத்திற்கு ஏற்றது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இது ஒன்று.
     

  • Temples dharshan

    கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தமிழகம் முழுவதும் இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகத்துடன் தரிசனம் மேற்கொண்டனர்
     
    முதல்கட்டமாக கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.

    அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களும் இன்று முதல் திறப்பதற்கு வழிகாட்டுதளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து  கோவில்களும் திறக்கப்பட்டன. முக கவசம், தனி மனித இடை வெளி போன்றவை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

  • Temples E Pass

    தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கு முக்கிய கோயில்களில் ஆன்லைன் வாயிலாக இ-பாஸ் கொடுத்து பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்தும் வகையில் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த பிறப்பித்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை ஜூன் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

     

    அப்போது ஜூன் 1 ஆம் தேதிக்கு பிறகு கோயில்களில் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் திறக்க அரசிடம் அனுமதி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஆன்லைன் மூலம் பாஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 பேர் வீதம் கோயில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், அந்த பாஸில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் தான் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். 

     

    அரசு அனுமதி கிடைத்தவுடன் திருப்பதி போன்று முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு பாஸ் வழங்கப்படுகிறது. கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை இந்த நிலை தொடரும் என்று கூறப்படுகிறது. 
     

  • Death sentence for cutting trees

    உலகின் முதன்மை மொழி, இலக்கணம் வகுக்கப்பட்ட மொழி, வாழ்வியலை செம்மைப்படுத்திக் கட்டமைத்த மொழி தமிழ். தமிழர்களின் கட்டுமான மற்றும் அடையாளச் சின்னங்களாக இன்றும் நிலைத்து நிற்பவை கற்களால் கட்டப்பட்ட கோவில்கள். இக்கோவில்கள் என்பவை வெறுமனே வழிபாட்டு மையங்களாக இல்லாமல், பாடல், ஆடல், இசைக் கலைக்கான அரங்கங்களாகவும், ஓவியம், சிற்பம் ஆகியவற்றுக்கான ஒரு கண்காட்சியாகவும் விளங்கியிருக்கின்றன. இயற்கைச் சீற்றங்களின்போது மக்களைக் காக்கும் அரணாகவும், கோபுரக் கலசங்களில் தானியங்களைப் பராமரித்ததன் அடிப்படையில் வேளாண்மைக்கு உதவியதாகவும் எனப் பலப் பயன்பாடுகள் கோவில்களில் இருந்துள்ளன. 

    கோவில்களைச் சுற்றியுள்ள வேளாண் நிலம், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களின் பல்வேறு காய் கனிகளின் வளர் தோட்டங்களாகவும் இருந்திருக்கின்றன. கோவிலுக்கு முன்னர் வெட்டப்பட்ட குளம் நீர்தேக்கும் நீர் ஆதாரமாக விளங்கியிருக்கிறது.

    இதேபோல,  மக்கள் உடல்நலன் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு மருந்துகள் கொடுக்கும் பொது இடமாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக துளசி தீர்த்தம் அளிக்கப்படும் கோவில் பகுதிகளில் காய்ச்சல், சளித் தொல்லை குறைவாக இருப்பதையும், தொற்று வியாதிகள் சில தொற்றாததையும் கடந்த காலங்களில் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

    அந்த வகையில் கோவில்கள் தமிழர்கள் நூலகங்களாகவும் செயல்பட்டுள்ள என்கிறார் தஞ்சை சரசுவதி மகால் தமிழ்ப் பண்டிதரும், சுவடிகள், கல்வெட்டுகள் மற்றும் கோவில்கள் ஆய்வறிருமான முனைவர். மணிமாறன்.

    பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளை, தென்புலத்தார், ஐயை உலகத் தமிழ் மகளிர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சென்னையில் ஓலைச்சுவடியியல் மற்றும் தமிழ்த் தொன்ம ஆய்வியல் பயிலரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

    சூன் 7 மற்றும் 8 ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் பயிற்சி அளிப்பதற்காக, முனைவர்.மணி.மாறன், பள்ளித்தலைமை ஆசிரியை திருமதி.கோ.ஜெயலட்சுமி, சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் தாமரைப்பாண்டியன், அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தி, கடல்சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வளார் ஒரிஸா பாலு ஆகியோர் பயிலரங்கில் பங்கு பெற்றனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களைச் சேந்தவர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் சுவடிகள் பற்றிய அடிப்படை, கிரந்த எழுத்து முறைகள், சுவடிகளில் நாட்டுப்புற வாழ்வியல், சுவடிகள் படிக்கும் முறை, பாதுகாக்கும் முறை உள்ளிட்ட அடிப்படையான பல ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன, பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

    பயிலரங்கில் ஆய்வுரை மற்றும் பயிற்சி அளித்த முனைவர் மணி.மாறன் பேசும்போது, தமிழர்களின் கோவில்கள் வெறும் கட்டடக்கலைக்கான சான்றுகளாக மட்டுமே நிற்கவில்லை, அவை தமிழர்களின் வாழ்வியல் சான்றாக நிற்கின்றன என்று கூறினார். தமிழக கோவில்களில் நூலகங்கள் செயல்பட்டன என்று குறிப்பிட்ட அவர், தமிழர்கள் முழுமையான முற்போக்கு அறிவு பெற்றவர்களாகவே இருந்துள்ளனர் என்று கூறினார். சுற்றுச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தமிழ் மன்னர்கள் என்று குறிப்பிட்ட அவர் மரங்களை வெட்டியவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட தகவல்களும் ஓலைச் சுவடிகளில் உள்ளதாகக் கூறினார்.

    தொடர்ந்து பயிற்சி அளித்த தஞ்சை பாபநாசம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையும், சுவடியியல் ஆய்வாளருமான கோ. ஜெயலட்சுமி, கிரந்த எழுத்துக்கள் என்பவற்றை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் அல்ல, தமிழர்களே என்று உறதிபடக்கூறினார். சமஸ்கிருதத்தைப் படிக்கப் பயன்டுத்தவேண்டிய நிலை வந்தபோது தமிழ் முழுமையாகச் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக, சமஸ்கிருதத்தைப் படிப்பதற்காகவே தமிழர்களால் உருவாக்கப்பட்ட மொழி வடிவமே கிரந்த மொழி வடிவம் என்று தரவுகளோடு எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேசிய, சென்னைத் தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் மற்றும் தமிழிலக்கியத் துறை உதவிப்பேராசிரியர் தாமரைப்பாண்டியன், தமிழர்கள் வணங்கும் குல தெய்வம் என்பர்கள் அனைவருமே பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும், கொலை செய்த தரப்பினரும் அதே கடவுளை வணங்குகின்றனர், கொலை செய்த தரப்பினரும் அதே கடவுளை வணங்குகிறார்கள் என்று ஒவ்வொரு குல தெய்வத்தின் பின்னணி வரலாற்றையும் விளக்கினார். மேலும், முருகனுக்கு ஒரே மனைவிதான் என்று குறிப்பிட்ட தாமரைப்பாண்டியன், தெய்வயானை என்பதெல்லாம் பின்னர் திணிக்கப்பட்ட கற்பனைக் கதை என்று கூறினார்.

    பயிலரங்கில் பேசிய கடல்சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிஸா பாலு, தமிழர்களின் கடல்சார் அறிவியல் உலகின் தலைசிறந்த அறிவு என்று கூறினார். உலகின் 190 நாடுகளில் தமிழர்களின் வேர்கள் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக்கூறிய அவர் ஓலைச் சுவடிகளில் தமிழர்களின் கடல்கடந்த வணிகம் பற்றிய பல குறிப்புகள் இருக்கவேண்டும் என்றும் அதுபற்றி முழுமையாக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

    தொன்ம ஆய்வுகள் எப்படிச் செய்யப்படவேண்டும் என்று உரையாற்றிய அனந்தபுரம் கிருஷ்ண மூர்த்தி, ஆய்வாளர்கள் ஒரு இலக்கை நோக்கி குறித்த ஆய்வுமேற்கொள்ளாமல் பரந்து பட்ட விரிவான, எதையும் விவாதத்திற்குள்ளாக்கி முடிவுக்கு வரும்வகையில் உறுதியாகவும், தெளிவாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும் என்றார். யாரோ சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆய்ந்தறிந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    முன்னதாக, பயிலரங்கை சென்னை எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். அரங்கமல்லிகா தொடங்கி வைத்து உரையாற்றியதுடன், மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் வழங்கினார். பயிலரங்கின் சிறப்பு விருந்தினர்களாக சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து ஐயை மகளிர் குழுவைச் சேர்ந்த திருமகள், போதிதர்மர் அறக்கட்டளை இயக்குநர் உமா பாலு, பத்திரிகையாளர் பா.ஏகலைவன், விழுப்புரம் ஐயை இஸ்மத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விஷ்வா விஷ்வநாத், இதழியலாளர்

  • world famous temples

    மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha)
    பாங்காக்கில் அமைந்துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர் சிலையானது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலைக்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

    ஸ்வேடகோன் பகோடா (Shwedagon Pagoda)


    புத்தர் கோவிலிலேயே மிகவும் பழமையானதும், வரலாற்றில் முக்கியமானதுமானது என்றால் அது மியான்மரில் இருக்கும் ஸ்வேடகோன் பகோடா தான். இதில் பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த்தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும்பாலும் பர்மாவில் தான் காணப்படும். இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதோடு, இரவிலும், பகலிலும் நன்கு மின்னும்.

    தக்த்சாங் மடம் (Taktshang Monastry)


    பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம் தான் தக்த்சாங் மடம். இது தவம் செய்வதற்கு சிறந்த ஒரு மடம். இந்த மடமானது 1692 இல் கட்டப்பட்டது. இங்கு பத்மசம்பவர் என்னும் இரண்டாம் புத்தர் புலியின் மீது ஏறி வந்ததால், இந்த மடத்திற்கு வந்ததால், இதற்கு இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

    தங்க கோயில் (Golden Temple)


    இந்தியாவில் உள்ள பஞ்சாம் மாநிலத்தில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் "ஹர்மந்திர்" ஆலயம், மிகவும் புகழ்பெற்ற, பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு புனித ஆலயம். இந்த தங்க ஆலயமானது பொன்னால் மின்னுவதோடு, குளத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

      
    பிரம்பனன் (Prambanan)


    இது உலகிலேயே மற்றொரு அழகான புகழ்பெற்ற கோயில். இந்த கோயிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்காக கட்டப்பட்டுள்ளது. இது தான் இந்தோனேஷியாவிலேயே மிகவும் பெரிய கோயில். இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமூட்டக்கூடியவை.

    வாட் ராங் குன் (Wat Rong Khun)


    தாய்லாந்து என்றாலே புத்த கோயில்கள் திரும்பிய இடமெல்லாம் இருக்கும். அத்தகைய கோவில்களில் வாட் ராங் குன் என்னும் புத்த கோயில், வெள்ளை மெசைக் கற்களால் மிகுந்த கலை நயத்துடன், இன்னும் கட்டப்பட்டு வருகிறது.

    போரோபுதூர் (Borobudur)


    இந்தோனேஷியா தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள போரோபுதூர், மகாயான பௌத்த நினைவுச் சின்னம். இது 2,672 புடைப்புச் சிற்பங்களையும், 504 புத்த சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது ஆறு சதுர வடிவ மேடைகளுடன், மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது.
      
    ஸ்ரீரங்கநாதர் ஆலயம் (Sri Ranganathaswamy Temple)


    உலகிலேயே மிகவும் பெரிய இந்து கோயில் என்றால் அது ஸ்ரீரங்கநாதர் கோவில் தான். இந்த கோவிலின் சிறப்பே கோபுரம் தான். இந்த கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், இந்துமதப் புராணங்களின் படி சித்திகரிக்கப்பட்டது. இந்த பெரிய கோபுரமானது குறைந்தது 200 அடி உயரத்துடன் இருப்பதோடு, 15 கதைகளையும் கொண்டது.