Karpaga vinayakar Alayam kumbabishegam

பூவிருந்தவல்லி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூவிருந்தவல்லி லகஷ்மிபுரத்தில் கிராம மக்கள் முயற்சியால் புதிதாக ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.இதன் கும்பாபிஷேக விழா கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது.மூன்றாம் நாளான இன்று வேதவிற்பனர்கள் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டுருந்த யாகத்தில் நான்காம் யாகசாலை பூஜையை செய்து முடித்தனர்.

பின்னர் பூர்ணாதியோடு கலச நீரை கோபுர விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி அருகே உள்ள பல்வேறு கிராம  ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *