Rameswaram Ramanadha swamy

மூலவர் ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர் என்றும் அம்பிகை பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி என்றும் திருவருள் புரியும் திருத்தலம் ராமேஸ்வரம். கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் (வெளியிலுள்ள 22 தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.) தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 8வது. இத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கத்தலம் இது. 

ராமருக்கு உதவி செய்த தன் மூலம் ராவணனின் அழிவிற்கு விபீஷணனும் ஒரு காரணமாக இருந்தான். அந்தப் பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதிரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, ‘ஜோதிர்லிங்கம்’ ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சந்நதி பிராகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது. மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக 

லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டே ராமநாதருக்கு பூஜை செய்கின்றனர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 198 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *