Thiruvannamalai Karthigai Deepam

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். 

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னிட்டு  7-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீப விழா வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *