Gangai Amman Koil Kumbabishegam

ஆவடி அருகே பருத்துப்பட்டு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் உள்ளது ஸ்ரீ கங்கையம்மன் ஆலயம்.பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது பருத்திப்பட்டு கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டது.இதனை அடுத்து ஆலயத்தின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் வேத விற்பனர்கள் மத்திரங்கள் முழங்க கோபுரக் கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *