Thiruverkadu Karumari amman

சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைமணி வைபவ உற்சவவத்தை முன்னிட்டு  2 டன் காய், கனிகளால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
 
தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் ஒன்று. இங்கு  ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமியில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும்.உலக ஜீவ ராசிகளின் பஞ்சத்தை போக்க அம்மன் தன் சரிரத்த்தில் அனைத்து விதமான காய்,கனி,தானியங்களை உற்பத்தி செய்து அனுக்கரித்தாக ஐதீகம். 

இதனை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு புரட்டாசி மாதம் பவுர்ணமி  அன்றும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும் அந்த வகையில் இன்று நடைபெற்ற நிறைமணி உற்சவவத்தில் அம்மன் 2 டன் காய்,கனி,தானியங்கள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

முன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்த்தில் கடைசி நாளில் இங்கு அலங்கரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.அம்மனின் நிறைமணி அலங்காரத்தை காண ஆலயத்திற்கு  பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *