Thirupathy Divaya Daharshan

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்ட திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

புரட்டாசி மாதத்தை ஒட்டி நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருந்து வந்த நிலையில் கடந்த 3 ம் தேதி முதல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலமாக வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசனம் டிக்கெட்கள் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தானம் அறிவித்தது.  

இந்நிலையில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையடுத்து பக்தர்கள் கூட்டம் தற்போது குறைந்துள்ளதால் நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்க கூடிய திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் வழங்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *