Vinayakar pattriya Ariya kurippugal

காரைக்கால் அம்மையார் வேண்டுகோளுக்கு ஏற்ப இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய ஸ்தலம் சென்னை அருகேயுள்ள திருவாலங்காடு. இந்த ஆலயத்தில் சித்தி விநாயகரைத் தரிசிக்கலாம்.

பூஜையின் முதல் வணக்கம் விநாயகப் பெருமானுக்குத்தான். இது தேவர், மனிதர் உட்பட அனைவருக்கும் பொருந்தும், விநாயகரை நினைக்காமல் செய்யும் எந்த பூஜைகளும், காரியங்களும் பலன் தராது.

மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுள்ள முக்குறுணிப் பிள்ளையாரும், நெல்லையப்பர் கோயிலில் உள்ள பிள்ளையாரும் மிகப் பெரியன.

திருவாரூர் கோயிலுள்ள, ஐங்கலக் காசு விநாயகர் முழுக்க தங்கத்தால் உருவானவர். அழகிய சோழ மன்னன் தந்த ஐந்து காலம் பொற்காசுகளை வைத்து உருவாக்கப்பட்டது இந்தத் தங்க விநாயகர் சிலை.

சுசீந்திரம் கோயிலில் விக்னேஸ்வரி என்ற பெண் உருவில் விநாயகர் சிலை உள்ளது.
 
மாணிக்கவாசகர் ஸ்தலமான ஆவுடையார் கோவில் குளக்கரையில் வல்லபையுடன், பத்துக் கரங்களுடன் வல்லபை விநாயகராகக் காட்சி தருகிறார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *