Thirupathy July month Hundiyal

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஜூலை மாதம் 109.60 கோடி பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம் , வெள்ளி என காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் தினந்தோறும்  எண்ணப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஒருநாளைக்கு 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை  காணிக்கையாக தேவஸ்தானத்துக்கு வருவாய் வருகிறது. கடந்த  2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 5 ஆயிரத்து 323 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 843 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 77 ஆயிரத்து 520 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 99 லட்சத்து 81 ஆயிரத்து 611 லட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கோடியே 14 லட்சத்து 46 ஆயிரத்து 36 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

சாமி தரிசனம் செய்த பக்தர்களில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 739 பக்தர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 10 லட்சத்து 69 ஆயிரத்து 748 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

உண்டியலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 102.88 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தி நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ 109.60 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டில் மார்ச் மாதம் 105.8 கோடியும் , ஜூன் மாதம் 100 கோடி, ஜூலை மாதத்தில் 109.60 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். 

2019 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல்  காணிக்கை செலுத்தி பக்தர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் உண்டியல் மூலமாக 1234 கோடி ரூபாய் பக்தர்கள்  உண்டியலில் செலுத்தும் காணிக்கையின் மூலமாக வரும் என தேவஸ்தானம் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *