Selva vinayagar koil Kumbabishegam

அரக்கோணம் அருகே அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அருளாசி பெற்றனர்..

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பகுதியில் நீண்டகாலமாக சிறிய கோயிலாக இருந்து வந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தற்போது மூன்று தள விமானத்துடனும் பல சிற்ப வேலைபாடுகளுடன் பெரிய கற்கோயிலாக கட்டப்பட்டு அதன் பணிகள் முடிவடைந்த நிலையில் இதன் புனராவர்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 விழா கடந்த 10 தேதி பந்தகால் நடுதல், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் என துவங்கி நாள் தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்து. இதன் தொடர்ச்சியாக இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இதில் வேத மத்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்துக்கொண்டு அருளாசி பெற்றனர். பின்னர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது….
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *