Thirupathy Pooringala…. Pls note

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சர்க்கார் சகஸ்ர கலசாபிஷேகம் சேவை நடைபெற உள்ளதால் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்துள்ள தேவஸ்தான நிர்வாகம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோடை விடுமுறை மற்றும் வாராந்திர வார விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி தேதி ஞாயிற்றுக்கிழமை மூன்று மணி நேரம் சர்க்கார் சகஸ்கர கலச அபிஷேகம் ( தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் பங்கேற்கக்கூடிய சேவை ) நடைபெற உள்ளது. 

எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டையின் மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் அன்று ஒரு நாளைக்கு ரத்து செய்யப்படுகிறது.  எனவே பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இலவச தரிசனத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *