Thirupathy 26 lakhs people dharshan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம்  25.89 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

மே மாதத்தில் மட்டும் 1 கோடியே 11 லட்சத்து 63 ஆயிரத்து 665 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 12 லட்சத்து 66 ஆயிரத்து 432 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் 89.02 கோடி ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு அறைகள் வாடகைக்கு விட்டதன் மூலமாக 7.24 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *