Lakshmi Narasimhar Car Festival

திண்டிவனத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கனகவல்லி நாயிகா சமேத அருள்மிகு ஸ்ரீ இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில் பிரம்மமோற்வ பெருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்,சூர்ணாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் கடந்த ஒருவாரமாக  தினம்தோறும்  நடைபெற்றுவந்தது.  

இந்நிலையில் இன்று அதிகாலை  கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மசுவாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு  திருத்தேரோட்டம் நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி அருளை பெற்றார்கள்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *