Samayapuram Rishaba vaganathil Amman Veedhi Ula

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்ச பிரகார விழா கடந்த 6 ந்தேதி தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

ஆயிரம் கண்களுடைய சமயபுரத்தாளுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும்.பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில்,ஐம்பெருங்கலை,ஐம்பெரும்பீடம், மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள பஞ்சபிரகார உற்சவம் மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னிநட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்க்காக இவ்விழா நடைபெறும்.

இந்நிலையில் 9 ம் நாளில் அம்மன் ரிஷப வாகனத்தில் வசந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு சன்னதி மற்றும் தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள்  பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *