Thirupathy Thyagaraja Jayanthi Urchavam

திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் பாபவிநாசம் சாலையில் உள்ள கல்யாண மேடையில்  252 ஆவது தியாகராஜர் ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது. 

இதில் தியாகராஜ ஸ்வாமி பஞ்சரத்ன கீர்த்தனைகள் , உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத  வித்வான்களின் கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது. இதில் ஸ்ரீ பத்மாவதி பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா இசை மற்றும் நாட்டிய கல்லூரி மாணவ ,மாணவிகள், அன்னமாச்சாரியா,  இந்து தர்ம பிரசார பரிஷத் கலைஞர்கள் என 300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் சங்கீத கச்சேரிகள் நடைபெற்றது. 

இதில் வெங்கடேஸ்வரா சங்கீத கல்லூரி முதல்வர் பத்மாவதி நிகழ்ச்சி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம் ரெட்டி ,பிரபல சங்கீத வித்வான் புதுக்கோட்டை ராமநாதன் ,ஹைதராபாத் சகோதரர்கள் சேஷாச்சாரி, ராகவாச்சாரி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இருந்து வந்த வீணை, வயலின், டோலு, நாதஸ்வர கலைஞர்களின் சங்கீத இசை கச்சேரி நடைபெற்றது .இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டும் கேட்டு ரசித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *