Koothandavar koil thali kattum nigazchi

உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவையொட்டி திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கியது. தமிழகம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு கோவில் முன்பு கூத்தாண்டவரை கணவராக நினைத்து கும்மி அடித்து ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர் 

அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கடைகளில் தாலி, பூ, வளையல் உள்ளிட்ட ஆபரண பொருட்களை வாங்கி வந்த திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *