Thiruthani bramorchava kodiyetram

திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

திருத்தணி கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் தினந்தோறும் காலை இரவு பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் பக்தர்கள் அருள்பாலிக்கிறார்.

முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியம் சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ இன்று காலை 6.30 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை மாத பிரம்மோற்சவயொட்டி இன்று அதிகாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம், வேல், பச்சைகள் முத்து, அணிவித்து தீபாராதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதை தொடர்ந்து, தினமும், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் காலை, மாலை ஆகிய இருவேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.வரும், 16ம் தேதி தேர் திருவிழாவும், 17ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 19ம் தேதி உற்சவர் சண்முகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *