Thirunallaru Kumbabishegam

திருநள்ளாறு கோவிலின் 14 வருடங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நவகிரகத் தலங்களில் முக்கியமானது. சனி பகவானின் மிக முக்கிய பரிகாரத் தலமுமாக திருநள்ளாறு கோயில் இருக்கிறது. 

இக்கோயிலில் 14 ஆண்டுகளுக்கு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் புதுவை அரசுக்கு கோரிக்கை வந்தது. இந்நிலையில், தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *