Kanchi Maha Periyava Aradhanai Vizha

காஞ்சி மகாபெரியவரின் ஆராதனையையொட்டி இன்று காஞ்சி சங்கரமடம், அங்கே உள்ள அதிஷ்டானம் மற்றும் பல ஊர்களிலும் காஞ்சி மகானுக்கான சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. இதையொட்டி அவருக்கான சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் வழிபாடுகளும் விமரிசையாக செய்யப்பட்டன.

காஞ்சிபுரத்தில், மகாபெரியவரின் அதிஷ்டானம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் உள்ளது. இங்கு மகாபெரியவரின் ஆராதனை விழா, விமரிசையாக நடத்தப்பட்டது. இதையொட்டி, ஆஸ்ரமத்தில் அதிருத்ர மகா யக்ஞ பூஜை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *