2018-03-29-13-39-57

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. இன்று அதிகாலை கோவில் நடை திறப்கப்பட்டது. மூலவருக்கு பால் தயிர், சந்தனம், பன்னீர், தேன், ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடைபெற்று, பின்னர் தேர் திருவிழாவை ஒட்டி முதலில் விநாயகர் தேரை மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருத்தேர் வடம்பிடித்தும் இரண்டாவதாக முருகர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் விழுப்புரம் மாவட்டம் மட்டும் இல்லாமல் கடலூர் புதுச்சேரி , சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரகனகான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தும் சாமி தரிசன் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *