2018-01-17-05-11-33

திருப்பதியைப் போல சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கும் வசதிகள் செய்து தர கேரள அரசு திட்டமிட்டுவருகிறது. இது தொடர்பாக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் திருப்பதிக்கு சென்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆராயும். இது தொடர்பாக எல்லா உதவிகளையும் செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உறுதியளித்துள்ளார். நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில், சபரிமலையிலும் பக்தர்களுக்கான வசதிகளை எப்படி செய்வது என்பது பற்றி திட்டம் வகுக்கப்படும். சபரிமலை கோயில் வனப்பகுதியில் அமைந்திருப்பதால் அதற்கேற்ப திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *