5

ரதசப்தமியையொட்டி திருப்பதியில் ஜனவரி 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் வருகிற 24-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. இதையொட்டி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை 7 வாகனங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வருகிறார். மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதனால் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது. அந்த நாட்களில் அதிமுக்கியத்துவ வி.ஐ.பி.கள் மட்டுமே தரினத்துக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் 24-ந் தேதி அன்று ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமகன், மாற்றுத் திறனாளிகள், கைக் குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. நடைபாதை மார்க்கத்தில் வருபவர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள், ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்டவை வழக்கம் போல் வழங்கப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *