2018-01-10-14-37-10

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ளது காலபைரவர் கோயில். இங்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா விமர்சையாக நடந்தது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் அஷ்டபைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனாகர்சன யாகம், குபேர யாகம், அதிருத்ர யாகம் நடந்தது. காலை 9 மணிக்கு தங்க கவசத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். அதை தொடர்ந்து 64 வகையான அபிஷேகம் 1008 அர்ச்சனைகள், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்னைகள், 64 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்கள் கலந்து கொண்டு தீபமேற்றி வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *