ஆண்களுக்கு மட்டுமே தரிசனம் தரும் திருப்பூர் முருகன்!

Written by

in

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரக்குமார் திருக்கோவில் உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு முள்புதரில் மண்ணுக்குள் சுயம்புவாக தோன்றிய முருகனை சுற்றி இருந்த முள் புதர்களை அகற்றி அப்புறப்படுத்தி விட்டு, அப்பகுதி மக்கள் முருகனை வழிபட்டு வந்த போதிலும்.16 ஆம், நூற்றாண்டில்' தான் அங்கு நிலையான கோவில் கட்டப்பட்டது.

இங்கு வழிபாடு தொடங்கிய நாள் முதலே' வீரக்குமார் சுவாமி சன்னதிக்குள் தரிசனத்திற்காக ' ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பெண் பக்தர்கள் சன்னதி முன் மண்டபத்துக்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு. அங்கிருந்தபடியே  முருகனை தரிசனம் செய்து, பிரசாதங்களை வாங்கிச் செல்லும்  வழக்கம் உள்ளது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்