சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக “தமிழ் கடவுள் முருகன் ” !

Written by

in

சிங்கப்பூரில் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உள்ளது. தமிழகத்திலிருந்து 1823 ஆம், ஆண்டு சென்று' சிங்கப்பூரில் குடியேறிய நகரத்தார் குடும்பத்தினர். சிலர் ஒன்று சேர்ந்து.1860 ஆம் ஆண்டு முருகப்பெருமானுக்கு, அரசமரத்தடியில் குளக்கரையின் ஓரத்தில், வேல் ஒன்றை வைத்து வழிபட்டு வந்தனர்.

அதன் பின் முருகனுக்கு சிறு சன்னதி அமைக்கப்பட்டு 1878 ஆம் ஆண்டு, விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டன. படிப்படியாக அங்கு  ஜம்பு விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், இடும்பன், தட்சிணா மூர்த்தி, பைரவர், மகா விஷ்ணு துர்க்கை,  மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக' ஐந்து கலசங்களுடன் 75 அடி உயர ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

அதனைக் கடந்து உள்ளே சென்றாள்.  மகா மண்டபமும் அதன் நேர் எதிரில் கருவறையில் மூலமூர்த்தியான முருகப்பெருமான் கருணையே வடிவாக  ‘தண்டாயுதபாணி’ என்ற திருநாமத்துடன் அருள் பாவிக்கிறார். தன்னை வேண்டி வரும், பக்தர்களின் வேதனைகளைப் போக்கி வேண்டுதலை நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கைத் தரும் உயர்ந்திட நல்லாசி புரிகிறார். தமிழ் கடவுள் ஆன" முருகப்பெருமானின் இந்த திருக்கோவிலானது, சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பது. இந்திய திருநாட்டிற்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே கருதப்படுகிறது. 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்