Thiruthani Kanthasasti puspanjali

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை திருவிழா நவம்பர் இரண்டாம் தேதி பூஜை உடன் தொடங்கியது.

இன்று ஆறாம் நாள் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முக பெருமாளுக்கு பத்து டன் வண்ண மலர்களால் சிறப்பு பூஜை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை சண்முகப் பெருமானுக்கு காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் மூன்று மணி நேரம் பூஜையில் கலந்து கொண்டு சாமிக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலியை அரோகரா அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *