siva peruman vazhipatta soorya bagavan

அனந்தலை கிராமத்தில் அகத்திய முனிவர் வழிபட்ட சுயம்பு சிவ பெருமானை சூரிய ஒளியால் வழிபட்ட சூரிய பகவான்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை சுயம்பு நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் அகத்திய முனிவரால் வழிபட்ட சிறப்புக்குரிய திருத்தலமாகும்.

இங்கு ஆண்டுதோறும்  புரட்டாசி மாதத்தில் சிவனின் திருமேனியின் மீது சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் இதேபோல வார காலமாக காலை 6.30 மணி முதல் சூரியன் உதயமாகி 6.45 வரை மூலவர் சிவலிங்கத்தின் திருமேனி மீது படர்ந்து ஜொலித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இதுபோன்ற சூரிய ஒளி கதிர்கள் வழிபடும் நேரத்தில் பக்தர்களுடைய திருமண தடை குழந்தை பாக்கியம் அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனால் அனந்தலை கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த தகவலை அறிந்ததும் கோவிலுக்கு வருகை தந்து காத்திருந்து சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபட்ட நிகழ்வை கண்டு மெய்சிலிர்த்து சுவாமியை வழிபட்டனர் மேலும் சூரியக் கதிர்கள் வழிபடும் நிகழ்வை முன்னிட்டு கருவறையில் இருக்கும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மங்கல தீபராதனைகள் நடைபெற்றது..

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *