Aadi first day amman alangaram

ஆடி முதல் நாள் முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சந்தன வெள்ளிக்காப்பு அலங்காரம் நீண்ட வரிசையில் நின்று  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களும் மற்றும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆடி முதல் நாளை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று.பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு சந்தன வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆடி முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *