Thirumalai padmavathi prinaya urchavam

திருமலை நாராயணகிரி உத்யான வனத்தில் பத்மாவதி பரிணய உற்சவம் வைபவமாக துவங்கியது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் இந்த உற்சவத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள  நாராயணகிரி உத்யான வனத்தில் உள்ள மண்டபம் மலர்களாலும் வண்ண விளக்குகலாலும் அலங்கரிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத  மலையப்ப சுவாமி  அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு பெருமாள் யானை வாகனத்திலும் அவர்கள் பழக்கிலும் எழுந்தருள பின்னர் சுவாமி தாயாருக்கு எதிர் கோல் உற்சவம் மாலை மாற்றுதலும் கோலாகலமாக நடைபெற்றது .

தொடர்ந்து நான்கு வேத பாராயணம் செய்ய, இசைக் கலைஞர்கள்  அன்னமாச்சாரியார் சங்கீர்த்தனைகளை பாட பெருமாள் தாயார்களின் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது . கண்ணுக்கு  விருந்தாக அலங்கரிக்கப்பட்ட நாராயணகிரி  வன மண்டபத்தில் இருந்து தங்க திருச்சி வாகனத்தில் பெருமாள் தாயார்கள் புறப்பட்டு    ஆலயத்தை அடைந்தனர் அத்துடன் முதல் நாள் உற்சவம் சிறப்பாக நிறைவு பெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *