Mariamman koil amavasai sirappu poojai

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மாவாசை சிறப்பு பூஜை அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது திருக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் ஆடி மாதம், அம்மாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய விசேஷ தினங்களும் முழுவதும் அம்மனுக்கு சிறப்பாக பல்வேறு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம்

அதேபோல் மாசி மாதம் அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.  முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், பன்னீர், மற்றும் சொர்ண அபிஷேகம் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமான சமயபுரம் மாரியம்மன் சுவாமி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *