shree varadharajaperumal temple festival

பெரியகுளத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருகல்யாண வைபவத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜபெருமாள் திருகல்யான் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் உற்சவர் பெருமாளுக்கு கிரீட ஆபரணங்கள் அணிந்தும் ஶ்ரீ தேவி பூதேவி தாயார் மணக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். முன்னதாக யாக குண்டத்தில்  ஹோமம் வளர்க்கப்பட்டு திருகல்யாண மாங்கல்யத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சமேத ஸ்ரீதேவி பூதேவி  தாயாருககு திருகல்யான பட்டுபுடவை சமர்ப்பிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்து சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *