arupadai veedu mahayagam

சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி அறுபடைவீடு மகாயாகம் நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடம் அமைந்துள்ளது. சித்தர் பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின்   குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி முருக பெருமானின் ஆறுபடை வீடு மகா யாகம் நடைபெற்றது. முருக பெருமான் அம்பாளுடன் எழுந்தருள  அவர்களுக்கு முன்பாக பிரமாண்ட 6  யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது.பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மகா யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *