Krishnar chutties

தென்காசி  காசி விசுவநாதர் கோயில் முன்பு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விசுவநாதர் கோயில் முன்பு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் ராதை சிவன் முருகன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து வந்தனர்.

பெரிய கோயில் முன்பிருந்து பேரணியாக சென்றனர் கோயில் முன்பு தொடங்கிய இந்த பேரணி ரத வீதியை சுற்றி மீண்டும் கோயில் முன்பு நிறைவு பெற்றது இதில் குழந்தைகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *