Thiruvadirai kali veetil seivadhu eppadi

திருவாதிரை களி வீட்டிலேயே செய்ய எளிய டிப்ஸ்….. 

தேவையான பொருட்கள்

பச்சரிசி அரிசி – ஒரு கப்,

மண்டை வெல்லம் – ஒன்றரை கப்,

தண்ணீர் – இரண்டரை கப்,

பாசிப்பருப்பு, வெள்ளை உளுந்து – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,

துருவிய தேங்காய் – ஒரு கப்

முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு.

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தப்பருப்பை தனித்தனியாக நன்றாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

அரிசியை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதிகம் மாவு போல வேண்டாம். அதே போல வறுத்த உளுந்தையும் அரைத்துக்கொள்ளவும்.

பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும் 2 விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். பிறகு மீண்டும் நன்றாக கொதிக்கவிடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கும் வெல்லப்பாகில் அரைத்து வைத்த அரிசி மாவு, உளுந்த மாவு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு நன்றாகக் கிளறவும். அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவேண்டும் அடி பிடிக்க விடக்கூடாது.

இந்த கலவை வெந்த உடன், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும். ஆடல் அரசன் நடராஜருக்கு படைத்த பின்னர் பிரசாதம் சாப்பிட அல்வா போல திருவாதிரை களி சுவையாக இருக்கும்
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *