Sabari malai nadai september 16

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16ம் தேதி திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைக்கிறார். 

தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை நடத்தப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 8.30க்கு நடை அடைக்கப்படும். 21ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சபரிமலை கோயில் திறந்திருக்கும். 

கோவிட் பரவல் காரணமாக, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஒருநாளைக்கு 15 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். கோவிட் நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவரவேண்டியது அவசியம்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும். 17ம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்பட உள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *