varalakshmi viradham sloham

வரலட்சுமி விரத பூஜையின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்….

பூஜை நிறைவு செய்யும் பொழுது தாம்பூலம் கொடுத்து வழியனுப்ப வேண்டும் எனவே தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவற்றுடன் ரவிக்கை வைத்துக் கொடுக்கலாம். பரம்பரையாக செய்து வருபவர்கள் வீட்டு பெண்களுக்கு புடவை வாங்கி வைத்துக் கொடுப்பது உண்டு. அப்போது தான் பூஜை நிறைவு பெறும்.

பூஜையின் போது உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி 108 போற்றி ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். லட்சுமிக்கு குங்குமத்தால் 108 முறை அர்ச்சனை செய்யலாம். பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். 

பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
வக்ஷஸ்தலஸ்த்திதே
வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
சதேஹிமே
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *