Thulasi Maandiram

தினமும் முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி, மஞ்சள் மற்றும் குங்குமத்தை துளசியின் தண்டில் வைத்து, பூவைத்தும் வழிபட, துளசியை  எல்லா நலன்களையும் நமக்கு பூரணமாய் தருவாள்.

ஸ்ரீமத் துளசியம்மா, திருவே கல்யாணி அம்மா

வெள்ளிக் கிழமைதன்னில் விளங்குகின்ற மாதாவே

செவ்வாய்க் கிழமைதன்னில் செழிக்க வந்த செந்திருவே

தாயாரே உந்தன் தாளினை நான் பணிந்தேன்

பச்சைப் பசுமையுள்ள துளசி நமஸ்தே

பரிமளிக்கும் மூலக்கொழுந்தே நமஸ்தே

அற்பப் பிறப்பை தவிர்ப்பாய் நமஸ்தே

அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே

ஹரியுடைய தேவி அழகி நமஸ்தே

அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே

வனமாலை எனும் மறுவே நமஸ்தே

வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *