Thia pirandhal vazhi pirakkum

மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். பிற கோள்களைப் போல் சூரியனுக்கும் இயக்கம் உண்டு. ஆனால், அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் சிறப்புடையது. வேறு எந்த கோளையும் சுற்றி வராது. 

ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடப்படுகிறது. சிவபெருமான் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எந்த கோளையும் சுற்றாது. மாறாக மற்ற கோள்கள்தான் அதை சுற்றும். எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் 

காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பது பழமொழி. எல்லா துறைகளைப்போலவே வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *