Deeparaathanai kaatuvathu ean?

தீபாராதனை காட்டுவது ஏன்?

பொதுவாகக் கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது. 

எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். இதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது.

தீபாராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

தீபாராதனையின் போது கோயிலில் எழும் ஒலி நம் காதில் விழும். கோயிலுக்கு வரும் சிலர் லோகாயத விஷயங்களை பேசலாம். அது உண்மையான பக்தர்களின் இறையுணர்விற்கு இடையூறாக இருக்கலாம். வேண்டாத வார்த்தைகள் காதில் விழாது.

மணியோசை கேட்டு துர்தேவதைகள், ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர். பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறது. மணிஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *