Sabari Malai Thiruvabaran Petti

மகர விளக்கு பூஜைக்காக பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு திருவாபரணப் பெட்டி ஊர்வலம் தொடங்கியது.  சபரிமலை அய்யப்பனுக்கு நடைபெறும் பிரசித்தி பெற்ற பூஜைகளில் மகர விளக்கு பூஜையும் ஒன்று. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அன்று மாலை 6.45 மணிக்கு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. 

மகர விளக்கு பூஜை யின்போது, சுவாமி அய்யப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டி ஊர்வலம் இன்று பந்தளம் அரண்மனையில் இருந்து தொடங்கியது. மேளதாளம் முழங்க நடைபெறும் இந்த ஊர்வலம் 15 ஆம் தேதி மாலையில் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும். 

அதன்பிறகு 18 ஆம் படி வழியாக திருவாபரணப் பெட்டி கொண்டு செல்லப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறும். மகர விளக்கு பூஜையின்போது அங்குள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதிதரிசனம் நடைபெறும். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *